search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் கொள்முதல் தடை"

    ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்ததற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    டெஹ்ரான் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஆனால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து இருந்தது.

     ஈரானிடம் பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை விதித்தால், வளைகுடா முழுதும் பெட்ரோல் கொள்முதல் செய்யப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

    அரசு முறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஹசன் ரௌகானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்வதை முற்றிலும் நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் கூறியதன் அர்த்தம் அவர்களுக்கே புரியவில்லை. ஈரான் நாட்டின் பெட்ரோல் கொள்முதல் தடை செய்யப்பட்டால் வளைகுடா நாடுகளின் பெட்ரோல் கொள்முதலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ×